இந்திய ராணுவம் பெண்களை கடத்தும், பலாத்காரம் செய்யும்.. கேரள மா.கம்யூ தலைவர் பேச்சால் சர்ச்சை
திருவனந்தபுரம்: ராணுவத்திற்கு அதிக அதிகாரம் கொடுத்தால் பெண்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொடியேரி பாலகிருஷ்ணன் பேசிய பேச்சு மலையாள டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவர் கூறுகையில், ராணுவத்திற்கு கூடுதல் பலத்தை வழங்கினால் யார் மீது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ராணுவ வீரர்கள் செய்வார்கள். பெண்களை கடத்துவது, பலாத்காரம் செய்வது ஆகியவற்றையும் செய்வார்கள்.

கன்னூருக்கு ராணுவத்தை அழைத்து வந்தால், மக்களுக்கும் ராணுவத்திற்கும் மோதல்தான் ஏற்படும். நான்கு பேருக்கு மேல் ஒன்றாக நின்றுகொண்டிருப்பதை பார்த்தாலே போதும், ராணுவம் சுட்டுக்கொன்றுவிடவும் வாய்ப்புள்ளது. அவர்களை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.
போர் போன்ற சூழல் உருவாகும்போது ராணுவம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு சுதந்திரம் கொடுத்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறியிருந்த நிலையில் கொடியேரி பாலகிருஷ்ணன் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.
அதேநேரம், ராணுவத்தை இழிவுபடுத்திவிட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு எதிராக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இடதுசாரிகள் நடுவே மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பிலும் கொலைகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கேரளாவுக்கு ராணுவத்தை அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பாஜக ஆதரவாளர்கள் கருத்து கூறிவரும் நிலையில் கொடிகேரி பாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications