பலாத்கார வழக்கில் சாட்சியாக இருந்த ஆசாராம் பாபுவின் சமையல்காரர் சுட்டுக் கொலை
லக்னோ: பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் சாமியார் ஆசாராம் பாபுவின் சமையல்காரரும், உதவியாளருமான அகில் குப்தா உத்தர பிரதேசத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சமைல்காரராகவும், உதவியாளராகவும் இருந்தவர் அகில் குப்தா(35). அகில் அண்மையில் தான் உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜன்சாத் ரோட்டில் புதிய வீடு கட்டி குடியேறினார்.

மேலும் அவர் மீனாக்ஷி சவுக்கில் உள்ள கங்கா பிளாசாவில் பால் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் கடையில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அகிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் அகில் குப்தா காந்திநகர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் ஆசாராம் பாபுவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
அகில் ஆசாராம் பாபுவின் அகமதாபாத் ஆசிரமத்தில் தான் சமையல்காரராக இருந்தார். அண்மையில் தான் அவர் முசாபர்நகர் வந்தார். முசாபர்நகரில் அவருக்கு எதிரிகள் இல்லை என்றும், ஆசாராம் பாபுவுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications