பலாத்கார வழக்கில் சாட்சியாக இருந்த ஆசாராம் பாபுவின் சமையல்காரர் சுட்டுக் கொலை
லக்னோ: பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் சாமியார் ஆசாராம் பாபுவின் சமையல்காரரும், உதவியாளருமான அகில் குப்தா உத்தர பிரதேசத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சமைல்காரராகவும், உதவியாளராகவும் இருந்தவர் அகில் குப்தா(35). அகில் அண்மையில் தான் உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜன்சாத் ரோட்டில் புதிய வீடு கட்டி குடியேறினார்.

மேலும் அவர் மீனாக்ஷி சவுக்கில் உள்ள கங்கா பிளாசாவில் பால் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் கடையில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அகிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் அகில் குப்தா காந்திநகர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் ஆசாராம் பாபுவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
அகில் ஆசாராம் பாபுவின் அகமதாபாத் ஆசிரமத்தில் தான் சமையல்காரராக இருந்தார். அண்மையில் தான் அவர் முசாபர்நகர் வந்தார். முசாபர்நகரில் அவருக்கு எதிரிகள் இல்லை என்றும், ஆசாராம் பாபுவுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications