சொத்துக்குவிப்பு வழக்கில் 30 வருடங்களுக்கு பிறகு 88 வயது மாஜி அரசு அதிகாரிக்கு ஓராண்டு சிறை
டெல்லி: 30 வருடத்திற்கு பிறகு மத்திய அரசு அதிகாரி ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணன் பகதூர். 1969ம் வருடம், மத்திய சட்ட அமைச்சக துணை சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். படிப்படியாக வளர்ந்து, 1983ம் ஆண்டு, வணிகத்துறையின் சட்ட ஆலோசகர் பதவி வகித்தார். அப்போது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் எழுந்தது. இதையடுத்து 1984ம் ஆண்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது.
1969ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தது முதல், 1984ம் ஆண்டுவரையில், அவரது உண்மையான வருவாய் 5.9 லட்சமாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஆனால், அவரிடம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வருமானத்திற்கு கணக்கு காட்டியது போக, கணக்கு காட்ட முடியாத ரூ.23 லட்சத்தை அவர் முறைகேடான வழியில் சம்பாதித்தார் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
30 வருடங்களாக நடந்த இவ்வழக்கில், பகதூருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 88 வயதாகும் பகதூர் சிறையில் தள்ளப்பட்டு்ள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications