ஒடிஷாவிலும் இயல்பு வாழ்க்கை முடக்கம்... கோசல் தனி மாநிலம் கோரி 11 மாவட்டங்களில் 'பந்த்'
சம்பல்பூர்: குஜராத்தில் படேல் சமூகம் இடஒதுக்கீடு கோரி பந்த் நடத்தி அம்மாநில இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதைப் போல ஒடிஷாவிலும் 'கோசல்' தனி மாநிலம் கோரி நேற்று 11 மாவட்டங்களில் நடத்தப்பட்ட முழு அடைப்பு மக்கள் வாழ்க்கையை முடக்கியது.
ஒடிஷாவின் ஜர்ஸ்குடா, சம்பல்பூர், ரூர்கேலா, சுந்தர்கார், டியோகார், பர்கார், சோனேபூர், கலஹாண்டி மற்றும் நுவபட உள்ளிட்ட 11 மாவட்டங்களை ஒருங்கிணைத்து 'கோசல்' மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இதற்காக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த 11 மாவட்டங்களில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டன. இதேபோல் தனியார் கல்வி நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டன.
பல்வேறு இடங்களில் பேரணிகளும் நடைபெற்றன. இருப்பினும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தனி மாநில கோரிக்கையால் ஒடிஷா அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications