முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு... கண்கவர் அணிவகுப்புகளால் அமர்க்களப்பட்ட டெல்லி
முப்படை வீரர்கள் இன்று பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் நடைபெற்றது.
டெல்லி: முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர், முப்படைகளின் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் களைகட்டின. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பெற்றார்.

இதையடுத்து ஆண்டுதோறும் குடியரசு தின விழாவுக்கு 3-ஆவது நாள், அதாவது ஜனவரி 29-ஆம் தேதி முப்படைகளின் வீரர்களும் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெறும். அதன்படி இந்த நிகழ்வு இன்று டெல்லியில் விஜய் சவுக்கில் நடைபெற்றது.
இது பழந்நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் குடியரசு தலைவர், பிரதமர், முப்படைகளின் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முப்படைகளின் வீரர்களும் பேண்ட் வாசித்தனர்.
இச்சடங்கு 1950இல் இந்தியப் படைத்துறையின் வெவ்வேறு பிரிவுகளின் இசைக்குழுக்களின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் மேஜர் இராபர்ட்சால் வடிவமைக்கப்பட்டது. மொத்தம் 26 பாடல்கள் இசைக்கப்பட்டன. அவற்றுள் 25 பாடல்கள் இந்தியர்களால் எழுதப்பட்டவை ஆகும்.
இதில் சாரே ஜஹான்சே அச்சா பாடலும் ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் பேண்ட் வாசிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications