மூளையை தூண்டிவிட்டு, கிதார் வாசிக்க வைத்து இளைஞரின் நரம்பு குறைப்பாட்டை சரி செய்த டாக்டர்கள்!
பெங்களூர்: எந்த நரம்பில் கோளாறு உள்ளது என்பதை கண்டறிய மூளையில் உள்ள செல்களை தூண்டி அதன் மூலம் இளைஞரை கிதார் வாசிக்க வைத்து அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் கிஷோர் (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கிதார் கலைஞர். கிதாரை அதிகப்படியாக வாசித்ததால் அவரது இடது கையில் மூன்று விரல்கள் நரம்பியல் குறைப்பாட்டால் செயலிழந்தன.

இதைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆபத்தான அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கிஷோருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர், அவரது தலையில் 4 ஸ்குருக்களை கொண்ட ஒரு சட்டத்தை பொருத்தினோம். அதைத் தொடர்ந்து எம்ஆர்ஐ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் எந்த நரம்பில் பிரச்சினை என்பதை கண்டறிய அவரது மண்டை ஓட்டில் மயக்க மருந்து செலுத்தி 14மிமீ அளவுக்கு துளை போடப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு வாய்ந்த கரன்ட் ஷாக் மூலம் அவரது மூளை செல்கள் தூண்டிவிடப்பட்டன.
பின்னர் அவரை கிதார் வாசிக்க வைத்து அதன் மூலம் எந்த நரம்பில் குறைபாடு உள்ளது என்பது குறித்த சரியான இடத்தை கண்டறிய முடிந்தது. இந்த அறுவை சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிஷோர் கூறுகையில், நான் தற்போது நலமாக உள்ளேன். செயலிழந்து கிடந்த எனது விரல்கள் மீண்டும் கிதாரை வாசிப்பதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சையால் நான் 100 சதவீதம் குணமடைந்துள்ளேன்.
முன்புபோல் என்னால் எனது விரல்களை இயக்க முடிகிறது. இன்னும் 3 நாட்களில் நான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி மீண்டும் கிதாரை வாசிப்பேன் என்றார் கிஷோர்.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications