For Daily Alerts
Just In
மீண்டும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கும் மசோதா?
டெல்லி: வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்குள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிப்பது தொடர்பாக 2012ம் ஆண்டு ராஜ்யசபாவில் மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் இடதுசாரிகள் இதற்கு கடுமையாக எதிர்த்தனர்.
இதனால் நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது. பின்னர் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
தற்போது மோடி அரசு அந்த மசோதாவை மீண்டும் கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இத் திட்டம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை நிச்சயம் எதிர்ப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் கூறியிருக்கிறது.
Comments
English summary
The Union human resources development ministry led by Smriti Irani is working hard to bring back one of the UPA government’s pet projects, the Foreign Universities Bill, that will allow foreign universities to open branches in India.
Story first published: Thursday, June 12, 2014, 9:32 [IST]