எவருடைய சிலையை அவமதித்தாலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது.. பொன் ராதாகிருஷ்ணன்
எவருடைய சிலையை அவமதித்தாலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எவருடைய சிலையை அவமதித்தாலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என எச் ராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எச் ராஜா கால தாமதமாக விளக்கம் அளித்துள்ளார். பெரியார் சிலை கருத்து குறித்து எச். ராஜா விளக்கம் அளித்துவிட்டார்.
திரிபுராவில் லெனின், தமிழகத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியதை பாஜக ஏற்றுக்கொள்ளாது. எச். ராஜாவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
சிலைகளை சேதப்படுத்துபவர்கள் பாஜகவின் கொள்கைக்கு எதிரானவர்கள். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications