பெங்களூரில் பயங்கரம்.. 4 மாடி கட்டிடம் இடிந்து 3 தொழிலாளர்கள் சாவு.. 7 பேர் படுகாயம்
Recommended Video

பெங்களூர்: பெங்களூரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பெங்களூர் நகரின் சர்ஜாப்பூர் சாலையிலுள்ள, கசுவனஹள்ளி பகுதியில், ரஃபீக் என்பவருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. பி.ஜி.யாக செயல்பட்டு வந்த அந்த கட்டிடத்தை வணிக நோக்கத்திற்கான கட்டிடமாக மாற்றும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் இன்று மாலையில் திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சுமார் 20 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதையறிந்ததும், தீயணைப்பு துறை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாலை 7.30 மணி நிலவரப்படி, 8 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இன்னும் சிலர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சிலர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். சிலருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு தொழிலாளி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மற்றொரு தொழிலாளி மீட்கப்படும்போதே இறந்த நிலையில் கிடந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் பல தொழிலாளர்கள் ஆங்காங்கு சிக்கியுள்ளனர். அசைவின்றி பல உடல்கள் அப்படியே கிடப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்தனர். வட மாநிலங்கள் மற்றும் வட கர்நாடகாவை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி மேலும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர், அப்துல் அகாதி கூறுகையில், முதலில் மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும். அந்த ஏரியாவில், மின் இணைப்பை துண்டித்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
இதில் மீட்கப்பட்ட பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை காயமடைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications