பொருளாதாரத்திற்கு ஊக்கம் தரப்போகிறது மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்!
மும்பை: இந்தியா-ஜப்பான் இணைந்து, மும்பை-அகமதாபாத் நடுவே புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதால் பொருளாதார ரீதியாக பல்வேறு வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்பட உள்ளது.
செப்டம்பர் 14ம் தேதி இந்த திட்டத்திற்கு பிரமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபியும் இணைந்து அடிக்கல் நாட்ட உள்ளனர். இந்த திட்டத்தால் பல்வேறு துறைகளிலும் உற்பத்தி அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்பு கூடும்.

புல்லட் ரயில் திட்டத்தஇற்கு, 120 லட்சம் கியூபிக் மீட்டர் கான்க்ரீட் தேவைப்படும். வருடத்திற்கு 2 மில்லியன் டன் சிமெண்ட் இத்திட்டத்திற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. திட்டத்திற்காக 15 லட்சம் மெட்ரிக் டன் இரும்பு தேவைப்படும். ஆண்டுக்கு 5 லட்சம் டன் என்ற அளவில் இந்த தேவை பகிர்ந்தளிக்கப்படும். ஏனெனில் 3 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவடைய உள்ளது.
நகர்ப்புற வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் ஸ்டேஷன்கள் அமையும் பகுதிகளில் புதிய தொழில்கள் உருவாகும். தொழில்கள் விரிவடையும். சாலை மார்க்கமாகவோ, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களிலோ மும்பை-அகமதாபாத் நடுவே 8 மணி நேரம் பயணிக்க வேண்டிவரும். ஆனால் புல்லட் ரயில் 2 மணி நேரத்தில் இதை சென்றடையும்.
தற்போது ஒரு மணி நேரத்திற்கு 8 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 40000 பயணிகள் இவ்விரு நகரங்கள் இடையே பயணிக்க முடியும். ஒரு ரயிலில் அதிகபட்சம் 750 பயணிகள் பயணிக்க முடியும். இது பின்னர் 1250 என உயர்த்தப்படும். எக்கனாமி ரேட்டில் இயக்கப்படும் 8 விமானங்களுக்கு ஈடானது இது. எனவே விமானங்களை இயக்கும் செலவு மிச்சமாகிறது.
20000 கட்டுமான தொழிலாளர்களுக்கு இத்திட்டம் பணி அளிக்க உள்ளது. திட்டம் தொடங்கிய பிறகு நேரடியாக 4000 பேருக்கும், மறைமுகமாக 16000 பேருக்கும் வேலை வாய்ப்பை தரப்போகிறது இந்த திட்டம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications