பீகார்: மோடிக்கு எதிராக தேசிய கொடி அவமதிப்பு வழக்கு
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் தேசியக் கொடியை அவமதித்ததாக பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் 21ம் தேதி நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் போது இந்திய தேசிய கொடி போல வடிவமைக்கப்பட்டிருந்த துண்டை கழுத்தில் அணிந்தது மட்டுமின்றி , முகம்,மற்றும் கைகளை துடைக்கவும் தேசியக்கொடியை பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் அவர் தேசியக்கொடியை அவமதித்துவிட்டதாக கூறி பொக்ரைரா கிராமவாசியான பிரகாஷ் குமார் என்பவர் முசாபர்பூர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது இந்த அநாகரிக செயல் மூலம் தேசியக்கொடி மீது மரியாதை வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் மனதை மோடி புண்படுத்தியுள்ளார் என அந்த புகாரில் பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குக்கான ஆதாரமாக,இது குறித்த புகைப்படங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து புகாருடன் அளித்துள்ளார். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,வழக்கு விசாரணை வரும் ஜூலை 16ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேபோல இந்தியா கேட் பகுதியில், கடந்த ஜூன் 21ஆம் தேதி, சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற மோடி, அங்கிருந்த தேசியக் கொடியை ஒரு கைக்குட்டையைப் போல பயன்படுத்தினார். இதேபோல், தனது அமெரிக்கப் பயணித்தின்போது அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடும் அளித்த தேசியக் கொடியில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். இது தேசியக்கொடி தொடர்பான விதிமுறைகளுக்கு முரணானது.
எனவே, தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்டது தொடர்பாக, மோடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என ஆசிஸ் சர்மா என்பவர் டெல்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications