காவிரி மேல்முறையீட்டு வழக்கு... 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிப்பு
டெல்லி: காவிரி மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய், கான்வில்கர் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. ஏற்கனவே இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிடவில்லை.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பாயம் அளித்த இறுதி தீர்ப்பின்படி காவிரி கண்காணிப்பு குழு அமைத்து, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நதியின் குறுக்கில் கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டுவதற்கு தடை விதிக்கக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், சிவகீர்த்தி சிங் மற்றும் ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.
அதன்படி இந்த மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், சிவகீர்த்தி சிங், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வை சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்தது. இதனிடையே இந்த அமர்வுக்கு தலைமையேற்ற நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்.
இதையடுத்து காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வை ஏற்படுத்துமாறு தலைமை நீதிபதியிடம் கர்நாடக அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கர்நாடக தரப்பின் இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கை வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் காவிரி தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய், கான்வில்கர் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 18ம் தேதியன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications