தூக்கியடிப்போம்.. கர்நாடக காவிரி மனு விவாதத்தில் சீறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதி
டெல்லி: நாங்கள் தூக்கியடிக்கத்தான் வழக்கை முன்கூட்டியே கொண்டுவருகிறோம்.. என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கடுமையான வார்த்தைகளால் கர்நாடகாவின் நிலைப்பாட்டை சாடியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்குத்தான் உள்ளது என்றும் இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டாம் என்றும் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் இன்று, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அமித் மிஸ்ரா மற்றும் லலித் குமார் அமர்வு முன்னிலையில் கேட்டுக்கொண்டார்.

இதற்கு, தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்தே எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகா இன்னும், தண்ணீர் விடவில்லை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒத்துழைக்கவில்லை. இப்படியுள்ள சூழ்நிலையில், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டாம் என்றார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டீர்களா என, அப்போது கர்நாடக தரப்பு வக்கீல்களை பார்த்து நீதிபதி அமித் மிஸ்ரா கேள்வி எழுப்பினார். அவர்கள் இல்லை என்றனர். மேலும், அந்த உத்தரவை சீராய்வு செய்ய மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளதால் இன்னும் தண்ணீர் திறக்கவில்லை என கூறினர்.
நீங்கள் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டீர்கள். ஆனால் சீராய்வு மனுவை மட்டும் தாக்கல் செய்வீர்கள், அப்படித்தானே என நீதிபதி பதிலுக்கு கேட்டார்.
இதையடுத்து மனு மீதான விசாரணை நாளைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு சேகர் நாப்தே எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தரப்பு தாக்கல் செய்யும் மனுவை விரைந்து விசாரிக்க கூடாது என்றார் நாப்தே.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி லலித் குமார், நான் வேண்டுமென்றுதான் முன்கூட்டியே விசாரிக்கிறோம். அதை தூக்கியடிக்கத்தான் முன்கூட்டியே விசாரிக்கப்போகிறோம் என்றார்.
நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ள நிலையில்தான், நீதிமன்ற கோபத்திற்கு அஞ்சி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications