காவிரி வன்முறையால் சர்வதேச அளவில் பெங்களூர் பெயர் தூள் தூள்...'கலவரத்தில்' தொழில்துறை!
பெங்களூர்: சிலிக்கான் வேலி என்ற இமேஜை சமீபத்திய காவிரி கலவரம் முற்றிலும் சிதைத்துவிட்டதாகவும், தொழில்துறையினர் வெளியே கிளம்ப தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில், அதிலும் குறிப்பாக பெங்களூரில் திங்கள்கிழமை பெரிய அளவில் கலவரம் வெடித்தது.
தமிழக பதிவெண் கொண்ட லாரி, பஸ்கள் தேடி தேடி எரிக்கப்பட்டன. சுமார் 100 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு ஊரே பற்றி எரிவதை போல காட்சியளித்தது.

ஊரடங்கு
இந்த பெரும் கலவரத்தால் 16 காவல் நிலைய எல்லைகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. நகரம் முழுக்க தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றும் ஆங்காங்கு சிறு சிறு கலவரங்கள் நடந்துள்ளன. இன்றுதான் ஓரளவுக்கு சகஜ நிலை திரும்பியுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

25 ஆயிரம் கோடி
இந்நிலையில், பெங்களூர் கலவரம், பந்த் போன்றவற்றால் பெங்களூருக்கு ரூ.22 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நஷ்டமாகியுள்ளதாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

சிலிக்கான்வேலி
பெங்களூர் என்பது சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் அளவுக்கு இமேஜ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இப்படி ஒரு கலவரம் நடந்துள்ளது என்பது, அதன் நற்பெயரை முற்றாக குலைத்துவிட்டது என்று வர்த்தகசபை செயலாளர் ராவத் கூறுகிறார்.

பல துறைகள்
ஐடி, சுற்றுலா, விமான சேவை துறைகளில், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தசபை தெரிவிக்கிறது. சரக்கு போக்குவரத்து, ரெஸ்டாரண்ட், சினிமா தொழில்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால்தான் இழப்பு கால் லட்சம் கோடி அளவுக்கு போயுள்ளதாகவும் கூறுகிறது அந்த அமைப்பு.

பெரிய நகரம்
வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியா. அந்த நாட்டின் முக்கியமான தொழில் நகரம் ஒன்றில் இதுபோல கலவரம் நடைபெறுவது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

கஷ்டப்பட்ட ஊழியர்கள்
பிளிப்கார்ட், இன்போசிஸ் போன்ற உலக புகழ் பெற்ற பல நிறுவனங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. கலவர நாட்களில் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றிக்கொள்ள அவை அனுமதித்தன. அமேசான் நிறுவன ஊழியர்கள் திங்கள்கிழமை, அலுவலகத்திற்கு உள்ளேயே சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications