For Daily Alerts
Just In
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறப்பு.. கர்நாடகாவில் விவசாயிகள் சாலை மறியல்
பெங்களூர்: கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்திற்கு கர்நாடகா கூடுதலாக தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்ககள்.
கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 4000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதற்கு மண்டியா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கபட்டணா பகுதி விவசாயிகள் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காவிரி நதிநீர் அலுவலகத்தையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்க்கு தண்ணீர் திறக்க கூடாது என்பது அவர்களது கோரிக்கை.
Comments
English summary
Karnataka Farmers stage road hurdle at Bengaluru-Musuru road to oppose releasing the Cauvery water to Tamilnadu.
Story first published: Monday, July 24, 2017, 17:16 [IST]