போலி பாஸ்போர்ட் வழக்கு: 10 நாட்கள் சிபிஐ காவலில் சோட்டா ராஜன்
டெல்லி: போலி பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் 20 ஆண்டுகளுக்கு மேலாக இன்டர்போலிடம் சிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றார். அப்போது குடியுரிமை அதிகாரிகள் அவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சோட்டா ராஜன் சிறப்பு விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் ராஜனை தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜனை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சோட்டா ராஜனின் பாஸ்போர்ட்டில் மோகன் குமார், மாண்டியா, கர்நாடகா என்று உள்ளது. இது குறித்து மாண்டியா போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜனின் பாஸ்போர்ட்டில் இருக்கும் முகவரியில் மோகன் குமார் என யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ராஜன் மோகன் குமார் பெயரில் போலி பாஸ்போர்ட்டை 1988 முதல் 1998ம் ஆண்டு காலத்தில் பெற்றிருக்கலாம். மேலும் அதை அவர் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் 2 முறை புதுப்பித்திருக்கிறார் என்று மாண்டியா போலீசார் தெரிவித்துள்ளனர்.
சோட்டா ராஜன் மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications