நீட் தேர்வுக்கு ரெடியாகும் மாணவர்களே... முதலில் வெளிர் நிற ஆடை இருக்கான்னு செக் பண்ணுங்க!
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
டெல்லி : மே மாதம் நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளை மத்திய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. வழக்கமான ஆடையில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்களுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 6ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத வந்த மாணவர்களிடம் ஆடைக்கட்டுப்பாடு என்ற பெயரில் அட்ராசிட்டி செய்தார்கள்.
முழுக்கை சட்டை போட்டிருந்த மாணவர்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டு அறைக்கை சட்டைகளாக மாற்றப்பட்டன. பெண்கள் கழுத்து கைகளில் இருந்த ஆபரணங்களை கழற்றிவைத்துவிட்டு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சிபஎஸ்இயின் இந்த கெடுபிடி பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சிபிஎஸ்இ ஆடைக்கட்டுப்பாடுகள் வெளியீடு
இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத உள்ளவர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடுகளை சிபிஎஸ், முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் வெளிர் நிற அறைக்கை சட்டை அணிய வேண்டும், ஷூக்களை அணியக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஹைஹீல்ஸ் கூடாது
பெரிய பொத்தான், பேட்ஜ் அல்லது பூ போட்டை சட்டையை அணியக் கூடாது. பெண்கள் சல்வார் அணிந்து வர வேண்டும், ஷூக்களை அணியக்கூடாது, காலணி மற்றும் சேன்டல்கள் குறைவான ஹீல்கள் பொருத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்கள் கூடாது
தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கொண்டுவரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு வந்தால் அவை அனுமதிக்கப்பட மாட்டாது என்பதோடு இதனை பாதுகாக்க தேர்வு மையங்களில் தனி வசதிகள் எதுவும் செய்து தரப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வித்தாளில் பிரச்னை வராமல் இருந்தால் சரி
ஆடைக்கட்டுப்பாடுகள் விதிப்பதெல்லாம் சரி தான் ஆனால் வினாத்தாள் பிரச்னையில் மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்கள் இந்த ஆண்டு சரிசெய்யப்படுமா என்பதே மாணவர்கள், பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது. கடந்த ஆண்டு குஜராத் தேர்தலை மனதில் வைத்து அந்த மாணவர்களுக்கு எளிதாக கேள்விகளை கேட்டது போல இந்த ஆண்டு கர்நாடக மாணவர்களுக்கு லக்கி அடித்தது போல ஆகாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை தயார் செய்தார் சரிதான் என்கிறது சிலரின் மைண்ட் வாய்ஸ்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications