அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பும் ஊதிய உயர்வு... தேர்தல் ஆணையர்களின் ஊதியம் டபுள் மடங்கு உயர்ந்தது!
தேர்தல் ஆணையர்களின் ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி: தேர்தல் ஆணையர்களின் ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஊதிய உயர்வு அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறது.
கடந்த 1-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்பிக்களின் ஊதியம் 100 சதவீதம் உயர்த்தியதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். அதன்படி ஜனாதிபதிக்கு ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாகவும் துணை ஜனாதிபதிக்கு 1.25 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும், மாநில ஆளுநர்களுக்கு ரூ. 1.1 லட்சத்திலிருந்து ரூ. 3.5 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதுபோல் எம்பிக்களுக்கு 1.4 லட்சத்திலிருந்து 2.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதுபோல் அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்ந்தது. தொகுதி அலவன்ஸ் ரூ.45, ஆயிரத்திலிருந்து ரூ. 70 ஆயிரமாக உயர்ந்தது.
அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக செலவுகளுக்கான தொகை ரூ. 45 ஆயிரத்திலிருந்து ரூ. 60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. எனினும் வாக்களித்து தேர்வு செய்ய மக்களும் பயன் பெறும் வகையில் எந்த வித நலத்திட்டங்களும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
மக்களின் வரிப்பணத்தில் மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்தை உயர்த்திய அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி உச்சதநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தியது.
அது போல் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் உள்பட இரு தேர்தல் ஆணையர்களின் ஊதியத்தையும் உயர்த்தியுள்ளது. ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உயர்த்தப்பட்ட ஊதியமும் இதுதான்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications