மோசமான சாலைகளால் விபத்து குறையும்.. மது குடித்தால் நல்லது தான்..சத்தீஸ்கர் அமைச்சரின் அடடே விளக்கம்
ராய்பூர்: சத்தீஸ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிரேம் சாய் சிங், ''மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மட்டுமே பலரும் பேசுவதாகவும், ஆனால் அதில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து யாரும் வாய் திறப்பதில்லை'' என்றும் பேசியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகலின் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இவரது அமைச்சரவையில் கூட்டுறவு துறையின் அமைச்சராக பணியாற்றி வருபவர் பிரேம் சாய் சிங்.

2 வீடியோக்கள் டிரெண்டிங்
பிரேம் சாய் சிங் மதுபானம் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துக்கள் குறித்து தற்போது பேசியுள்ள வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அவர் பேசிய 2 வீடியோக்கள் டிரெண்டாகி வருகிறது. அதில் ஒரு வீடியோ ஏன் சாலை விபத்துக்கள் நடக்கிறது என்பது குறித்து பேசியதும், 2-வது வீடியோ மதுபானத்தில் பல நன்மைகள் உள்ளது என்று பேசியிருப்பதும் தான்.

குண்டும் குழியுமான சாலைகள்
'சாலை விபத்துக்கள் குண்டும் குழியுமான சாலைகளின் காரணமாக ஏற்படவில்லை என்றும் நல்ல, சீரமைக்கப்பட்ட சாலைகளில் தான் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகிறது என்றும் சத்தீஸ்கர் அமைச்சர் பிரேம் சாய் சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் அந்த வீடியோவில், ''பல இடங்களில் குண்டும் குழியுமான சாலைகள் இருப்பதாகவும், அதனை அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிக புகார்கள் வருகின்றனர். இந்த மோசமாக சாலைகளில் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படவில்லை.

வாகன ஓட்டிகள் வேகமாக செல்கிறார்கள்
ஆனால் நல்ல சீரமைக்கப்பட்ட சாலைகளில் தான் விபத்துக்கள் நடக்கின்றன. ஏனென்றால் நல்ல சாலைகளில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கிறார்கள். அதனால் இந்த சாலைகளில் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன'' என்று கூறியுள்ளார். இதேபோல் மதுபானம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பலர் பேசுகின்றனர் என்றும் அதில் இருக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து யாரும் வாய் திறக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

பல நன்மைகள் உள்ளன
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''மதுபானத்தில் ஏராளமான பல நன்மைகள் உள்ளன. ஆனால் இதுவரை யாரும் அதன் நன்மைகள் குறித்து பேசவில்லை. அதனால் ஏற்படும் தீங்குகள் குறித்து தான் பேசுகின்றனர். இதேபோல் பலரும் அதனை எப்படி அருந்துவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சரியான விதத்தில் தண்ணீர் கலந்து மதுபானம் குடித்தால் பல நன்மைகள் உண்டு" என்று கூறியுள்ளார். அமைச்சர் பிரேம் சாய் சிங்கின் இந்த 2 வீடியோக்களும் சமூக வலைத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அமைச்சரின் பேச்சுக்கு கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications