காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் காவல்காரன் நான்: கர்நாடக உதய நாளில் சித்தராமையா சூளுரை
பெங்களூர்: நவம்பர் 1ம் தேதி என்பது மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த தினம். தமிழகத்தில் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் கர்நாடகாவில், ராஜ்யோத்சவா என்ற பெயரில் பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். சுதந்திர தினத்தைவிட ஒருபடி அதிகமாக அங்கு கொண்டாட்டங்கள் இருக்கின்றன.
ராஜ்யோத்சவாவை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு முதல்வர் சித்தராமையா, தூர்தர்ஷனின் கன்னட சேனலான சந்தனா டிவியில், வாழ்த்து தெரிவித்து நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் காவிரி விஷயம் குறித்தும் பேச தவறவில்லை. அவர் கூறுகையில், நிலம், நீர், மொழி பிரச்சினைகளில் கர்நாடகாவிற்கு எப்போதும் நிரந்தரமாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்ற மனோபாவம் கன்னடர்கள் மத்தியில் எப்போதுமே உள்ளது. காவிரி பிரச்சினையிலும் இத்தகைய எண்ணம் வெளிப்பட்டுள்ளது. கர்நாடகாவில், தொடர்ந்து 2வது ஆண்டாக வறட்சி ஏற்பட்டுள்ளதால் வெளிப்படும் விவசாயிகளின் இயலாமை கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
அநீதிக்கு உள்ளானவர்கள் போராட்டங்கள் நடத்த உரிமை உள்ளது. ஆனால், கூட்டாட்சி நடைமுறையை ஏற்றுக்கொண்ட நாம் அதற்கு மரியாதை கொடுத்தபடியே, நமக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டும். நாம் பொறுமையை இழக்கக்கூடாது. நமது தலையை நாமே சுவற்றில் இடித்து கொள்ளக்கூடாது.
நிலம், நீர், மொழியை பாதுகாக்கும் பணியை நான் தொடர்ந்து மேற்கொள்வேன். ஒரு காவல்காரரை போல இந்த வேலையை செய்வேன். காவிரி நதி நீர் பிரச்சினையில் கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கர்நாடகாவின் போராட்டம் தொடரும். இந்த விஷயத்தில் எங்கள் அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறது. மாநிலத்தின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது என்றார்.
-
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications