நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: சிபிஐ அறிக்கை இன்று தாக்கல்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்ய உள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 11ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1993 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பாக முதல்கட்ட விசரணைக்கு பிறகு 16 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்திருந்தது. அவற்றில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வது என்று சிபிஐ முடிவு செய்துள்ளது.
இதன்படி, விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. அதிகார வரம்பு மீறல் என்ற காரணத்தை காட்டி விசாரணைக்கு ஒத்துழைக்க தயங்கும் 9 மாநில அரசுகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ள அறிக்கையில் சிபிஐ குறிப்பிடும் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications