நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: சிபிஐ அறிக்கை இன்று தாக்கல்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்ய உள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 11ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1993 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பாக முதல்கட்ட விசரணைக்கு பிறகு 16 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்திருந்தது. அவற்றில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வது என்று சிபிஐ முடிவு செய்துள்ளது.
இதன்படி, விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. அதிகார வரம்பு மீறல் என்ற காரணத்தை காட்டி விசாரணைக்கு ஒத்துழைக்க தயங்கும் 9 மாநில அரசுகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ள அறிக்கையில் சிபிஐ குறிப்பிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications