நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: சிபிஐ அறிக்கை இன்று தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்ய உள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 11ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Coal scam: CBI to file status report in Supreme Court today

1993 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பாக முதல்கட்ட விசரணைக்கு பிறகு 16 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்திருந்தது. அவற்றில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வது என்று சிபிஐ முடிவு செய்துள்ளது.

இதன்படி, விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. அதிகார வரம்பு மீறல் என்ற காரணத்தை காட்டி விசாரணைக்கு ஒத்துழைக்க தயங்கும் 9 மாநில அரசுகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ள அறிக்கையில் சிபிஐ குறிப்பிடும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+