Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இன்னும் 6 மாதத்தில் பாஜக அரசு கவிழும்.!" பீகாரில் ஆவேசமாக பேசிய கார்கே.. உற்று பார்த்த தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் இன்னும் கொஞ்ச காலத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு மிக பெரிய யாத்திரையை காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி நடத்தி வருகிறது. வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த யாத்திரையில் பேசிய கார்கே, மிக கடுமையான விமர்சனங்களை மோடி மீது முன்வைத்தார். மோடி வாக்கு திருட்டு மூலம் வெல்ல நினைப்பதாக விமர்சித்த அவர், இரட்டை இஞ்சின் அரசு சீக்கிரமே கவிழும் என்றும் சாடினார்.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்கு திருட்டு புகாரை முன்வைத்திருந்தார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வாக்கு திருட்டு புகாரை முன்வைத்து காங்கிரஸ் தலைவர்கள் பீகாரில் தொடர் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.

Congress Chief Kharge Predicts Fall of Bihar BJP Double Engine government Within 6 Months in Bihar

கார்கே

இதற்கடையே இன்று பீகாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் தேஜஸ்வி யாதவ் உடன் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். பீகார் சட்டமன்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு மூலம் வெற்றிபெற பிரதமர் நரேந்திர மோடி முயல்வதாக சாடினார்.

அரசு கவிழும்

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை எஞ்சின் அரசு விரைவில் அகற்றப்பட்டு, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் புதிய அரசு அமையும் என்றும் அவர் தெரிவித்தார். பீகாரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார் யாத்ராவின் நிறைவுப் பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, "பீகாரில் இந்த இரட்டை எஞ்சின் அரசு இன்னும் 6 மாதங்களில் இருக்காது.. ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோரின் புதிய அரசு அமையும்" என்று கூறினார்.

நிதிஷ் குமாரை கைவிடுவார்கள்

இந்த கூட்டத்தில் பேசிய கார்கே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்தார். ஒரு காலத்தில் சமத்துவத்தைப் பற்றிப் பேசிய நிதிஷ் குமார், இப்போது பாஜக ஆர்எஸ்எஸ் உடன் இணைந்துள்ளார் என்று கார்கே சாடினார். நிச்சயம் சீக்கிரமே நிதிஷ் குமாரை ஆர்எஸ்எஸ்-பாஜக கைவிடும் என்றும் அவர் கூறினார்.

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடந்தி சில வாரங்களாகவே பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை நடத்தினர். பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் வழியாக 1,300 கி.மீ தூரம் கடந்து, 110 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக இந்த பேரணி சென்றது.. இந்த யாத்திரையின் நிறைவாகவே இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தான் கார்கே இந்த கருத்துகளை கூறினார்.

வாக்கை திருடும் பாஜக

கார்கே மேலும் பேசுகையில், "இந்த வாக்காளர் அதிகார யாத்திரை நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. அதை சீர்குலைக்க முயற்சிகள் நடந்தன.. ஆனால் பீகார் மக்களும் மகாபந்தன் தலைவர்களும் பின்வாங்கவில்லை.. மோடி பீகார் தேர்தல்களில் வாக்குத் திருட்டு மூலம் வெற்றிபெற முயற்சிக்கிறார். எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், மோடியும் அமித் ஷாவும் உங்களை ஒடுக்குவார்கள்." என்று கார்கே கூறினார்.

'காந்தி சே அம்பேத்கர்' என்ற இந்த யாத்திரையை பீகார் போலீசார் பாதியிலேயே நிறுத்தினர். இதனால் அங்கிருந்தபடி தலைவர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றினர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி, சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐயின் அன்னி ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யூசுப் பதான், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+