கோவா மாதிரி ஏமாந்துவிட கூடாது.. எச்சரிக்கையாக மேகலாயா விரைந்த காங். சீனியர் தலைவர்கள்
Recommended Video

ஷில்லாங்: மேகலயா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்ற நிலையில், மேகாலயாவிற்கு காங். மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், கமல்நாத் விரைந்துள்ளனர்.
கோவாவில் கடந்த சட்டசபை தேர்தலில் தனி பெரும் கட்சியாக பெரும்பான்மை பெற்றது காங்கிரஸ். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றபோதிலும், கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டது அக்கட்சி.

எனவே நைசாக உள்ளே புகுந்த பாஜக எதிர்த் தரப்பு எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.
இந்த நிலையில்தான், மேகலயாவில் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. எனவே கோவை நிலைமை ஆகிவிட கூடாது என்பதால், ஆட்சி அமைப்பதை உறுதி செய்ய வசதியாக அகமது பட்டேல் மற்றும் கமல்நாத் ஷில்லாங் விரைந்துள்ளனர்.
அவர்கள் அங்கே தேவைப்படும் கூட்டணிகளை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications