எங்களுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தர வேண்டும்- சோனி்யா
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும். காங்கிரஸுக்கு மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர உரிமை உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள்தான் தனிப் பெரும் எதிர்க் கட்சி. எனவே எங்களுக்கே இந்தப் பதவியை வகிக்கும் உரிமையும், முறையும் உள்ளது என்றார் சோனியா.

அதேசமயம், இதற்காக நீதிமன்றத்தை நாடும் திட்டம் உள்ளதா என்பது குறித்து சோனியா பதிலளிக்க மறுத்து விட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபாவில் 44 உறுப்பினர்களே உள்ளனர். பாஜகவுக்கு அடுத்து அதிக இடங்களை வைத்துள்ள கட்சி இதுதான். ஆனால் 55 உறுப்பினர்கள் இருந்தால்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தங்களுக்கு 60 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தர வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது.
அதேசமயம், 3வது பெரிய கட்சியான அதிமுக, 4வது கட்சியான திரினமூல் காங்கிரஸ் ஆகியவை ஒருங்கிணைந்து கூட்டாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லோக்சபாவில் மட்டுமே பாஜக பெரும்பான்மையுடன் உள்ளது. ராஜ்யசபாவில் இல்லை. சட்ட மசோதாக்களை சிக்கலின்றி நிறைவேற்ற ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு அதற்குத் தேவை. எனவே காங்கிரஸுக்கே லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாஜக வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications