எங்கதானப்பா போனார் ராகுல்? எப்போதுதான் காங். தலைவராக மகுடம் சூட்டுவாங்க?
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்னமும் டெல்லி திரும்பாததால் அடுத்த மாதம் காங்கிரஸ் கமிட்டியின் சிறப்புக் கூட்டம் நடைபெறுவது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி அனேகமாக இந்த ஆண்டின் இறுதியில்தான் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் தொடங்கி டெல்லி சட்டசபை தேர்தல் வரை காங்கிரஸ் அடிமேல் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் காங்கிரஸின் முகமாக கருதப்படுகிற அக்கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டது. ஆனால் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்காமல் 'லீவ்' எடுத்துக் கொண்டு ராகுல் ஓய்வெடுக்கப் போய்விட்டதாக கூறப்பட்டது. முதலில் 2 வாரம்தான் ராகுல் லீவில் போயிருக்கார் என காங்கிரசார் கூறிவந்தனர்.
ஆனால் ஒரு மாத காலமாகப் போகிறது....ராகுல் காந்தி எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ற எந்த ஒரு தகவலும் இல்லை. டெல்லியில் ராகுலை நம்பி நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்த குவிந்தனர். ஆனால் ராகுல் காந்தி வராத நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களே அந்த போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் மேலும் சில வாரங்களுக்கு ராகுல் காந்தியின் லீவ் நீட்டிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த மாத இறுதியில்தான் ராகுல் காந்தி டெல்லி திரும்பி 'அரசியலில்' மீண்டும் குதிப்பார் எனக் கூறப்படுகிறது.
அதனால் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் அக்கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
அப்போதுதான் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்திக்கு மகுடம் சூட்டப்படும் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
இதனிடையே சோனியா மற்றும் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற வருகைப் பதிவும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமான விவாதத்துக்குள்ளாகியுள்ளது. சோனியா காந்தியைப் பொறுத்தவரையில் 2009-ல் 38%; 2010-ல் 26%; 2011-ல் 63%; 2012-ல் 45% 2013-ல் 30%; 2014-ல் 36% நாட்கள் வருகைப் பதிவு வைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் 2009 ஆம் ஆண்டு 95% வருகைப் பதிவு கொண்டிருந்தார்.
ஆனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்களில் ராகுல் காந்தியின் பங்கேற்பு என்பது மிக அதிகபட்சமாக இருந்து வந்தது.. நடப்பு கூட்டத் தொடரை தவிர...
2009ஆம் ஆண்டு 75%; 2010-ல் 30%; 2011-ல் 37%; 2012-ல் 66%; 2013-ல் 81% வருகைப் பதிவு வைத்திருந்தார் ராகுல். தற்போதைய கூட்டத் தொடரில் ஒருநாள் கூட ராகுல் கலந்து கொள்ளாமல் முட்டை % வாங்கி வைத்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்...
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
காங்கிரஸை டம்மி ஆக்குதா தவெக? ஒரே நாளில் சொதப்பிய விஜய்யின் டெல்லி பயணம்! அப்ப பாஜக லேசில் விடாதே -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications