திடீர் திருப்பம்.. தள்ளிப்போனது வாக்கு எண்ணிக்கை.. மிசோரமில் திங்கள்கிழமை கவுண்டிங்
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதை மாற்றி டிச. 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. அதில் மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.

அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் டிச. 3ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மிசோரம்: இதற்கிடையே மிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மிசோரம் மாநிலத்தில் உள்ள என்ஜிஓ குழு தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்க டெல்லிக்குச் சென்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
மிசோரம் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அங்குள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடக்கக் கூடாது என்று வலியுறுத்தின. இது தொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து கோரிக்கையும் வைத்தனர்.
இந்தச் சூழலில் தான் மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அங்கே டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதை மாற்றி டிச. 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே கடந்த நவ. 7ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் 80% வாக்குகள் பதிவானது. அங்கே மிசோரம் முன்னணி மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications