டேவிஸ் கோப்பை டென்னிஸ்: செக் குடியரசு ஜோடியிடம் நேர் செட்களில் வீழ்ந்த பயஸ்-போபண்ணா ஜோடி!
டெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிசில் செக் குடியரசு இணையிடம் 5-7. 6-2. 2-6 என்ற செட் கணக்குகளில் இந்திய ஜோடி பயஸ், போபண்ணா தோல்வியடைந்தது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக ‘பிளே- ஆப்' சுற்று ஆட்டத்தில் இந்தியா- செக் குடியரசு அணிகள் விளையாடி வருகின்றன. டெல்லியில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டம் நாளை வரை நடக்கிறது.
இன்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- போபண்ணா ஜோடி, செக் குடியரசின் பவ்லாசேக்- ஸ்டெபெனேக் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் செக் குடியரசு ஜோடி 7-5 என்ற கணக்கில் வென்றது.
முதல் செட்டில் தோல்வியடைந்ததால் 2வது செட்டில் இந்திய ஜோடி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது செட்டை 2-6 என எளிதில் இழந்தது. அடுத்த செட்டிலும் இந்திய ஜோடி சோபிக்க தவறியதால் 2-6 அந்த செட்டையும் இழந்தது.
இதனால் பயஸ்- போபண்ணா ஜோடி 3-0 என நேர்செட்களில் பரிதாப தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
நாளை மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இரண்டு மாற்று ஒற்றையர் போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.