சரணடைய விரும்பிய தாவூத்! ஏற்றுக் கொள்ளாத சி.பி.ஐ: டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் 'திடுக்' தகவல்
டெல்லி: மும்பை தாக்குதலைத் தொடர்ந்து நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பிய போதும் சில காரணங்களால் சி.பி.ஐ. ஏற்கவில்லை என்று டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் நடைபெற்று 15 மாதத்திற்கு பிறகு பிரபல கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிம் சரணடைய தயார் என தெரிவித்து சிபிஐ டிஐஜி நீரஜ் குமாரிடம் பேசி உள்ளான். ஆனால் சில காரணங்களுக்காக இதை சிபிஐ ஏற்று கொள்ளவில்லை என மும்பை போலீஸ் கமிஷன்ர் தெரிவித்து உள்ளார்.

டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த நீராஜ் குமார் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாத ஓய்வு பெற்றார். சிபிஐயின் மும்பை குண்டு வழக்கு விசாரணையில் நீராஜ் முன்னணி அதிகாரியாக இருந்தவரும் கூட.
இவர் தமது ஓய்வுக்கு பிறகு புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். அதில் தனது 37 ஆண்டு கால போலீஸ் பணியில் சந்தித்த குற்றவாளிகள் குறித்தும் நிழல் உலக தாதாக்கள் குறித்து எழுதி உள்ளார்.
இப்புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது. புத்தகத்தை பென் குயின் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த புத்தகத்தில் நீராஜ் குமார் கூறியுள்ள சில தகவல்கள்:
- 1993ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெற்ற 15 மாதங்களுக்குப் பின்னர் பதற்றத்துடன் இருந்த தாவூத்துடன் 1994 ஜூன் மாதம் 3 முறை பேசினேன்.
- அப்போது அவன் சரணடையும் எண்ணத்துடன் இருந்தான் ஆனால் அவனிடம் ஒரு கவலை இருந்தது. இந்தியா திரும்பும் போது தன்னை எதிர் கும்பல தீர்த்து கட்டுவார்கள் என்பதால் சி.பி.ஐ, பாதுகாப்பு கோரியிருந்தான்.
- என்னுடைய மூத்த அதிகாரிகள் தாவூத்துடனான தொலைபேசி தொடர்புகளை துண்டித்து கொள்ளுமாறு எனக்கு அறிவுறுத்தினர்.
- தாவூத் தொடர்ந்து என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்தான்..ஆனால் என்னிடம் அதிகாரம் இல்லை என்பதால் நான் அவனுடன் பேசுவதை விலக்கி கொண்டேன்."
- ஏற்கெனவே மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி "இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி தான் சரணடைய விருப்பம் தெரித்து இருந்தார். ஆனால் அவரின் நிபந்தனைகளான துன்புறுத்த கூடாது; தன்னை வீட்டு காவலில் வைக்க வேண்டும் ஆகியவற்றை அரசு ஏற்று கொள்ள வில்லை" என கூறி இருந்தார் எனபது குறிப்பிட தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications