Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரணடைய விரும்பிய தாவூத்! ஏற்றுக் கொள்ளாத சி.பி.ஐ: டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் 'திடுக்' தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மும்பை தாக்குதலைத் தொடர்ந்து நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பிய போதும் சில காரணங்களால் சி.பி.ஐ. ஏற்கவில்லை என்று டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் நடைபெற்று 15 மாதத்திற்கு பிறகு பிரபல கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிம் சரணடைய தயார் என தெரிவித்து சிபிஐ டிஐஜி நீரஜ் குமாரிடம் பேசி உள்ளான். ஆனால் சில காரணங்களுக்காக இதை சிபிஐ ஏற்று கொள்ளவில்லை என மும்பை போலீஸ் கமிஷன்ர் தெரிவித்து உள்ளார்.

Dawood Ibrahim wanted to surrender, CBI didn’t go along: Ex-Delhi Police chief Neeraj Kumar

டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த நீராஜ் குமார் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாத ஓய்வு பெற்றார். சிபிஐயின் மும்பை குண்டு வழக்கு விசாரணையில் நீராஜ் முன்னணி அதிகாரியாக இருந்தவரும் கூட.

இவர் தமது ஓய்வுக்கு பிறகு புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். அதில் தனது 37 ஆண்டு கால போலீஸ் பணியில் சந்தித்த குற்றவாளிகள் குறித்தும் நிழல் உலக தாதாக்கள் குறித்து எழுதி உள்ளார்.

இப்புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது. புத்தகத்தை பென் குயின் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த புத்தகத்தில் நீராஜ் குமார் கூறியுள்ள சில தகவல்கள்:

  • 1993ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெற்ற 15 மாதங்களுக்குப் பின்னர் பதற்றத்துடன் இருந்த தாவூத்துடன் 1994 ஜூன் மாதம் 3 முறை பேசினேன்.
  • அப்போது அவன் சரணடையும் எண்ணத்துடன் இருந்தான் ஆனால் அவனிடம் ஒரு கவலை இருந்தது. இந்தியா திரும்பும் போது தன்னை எதிர் கும்பல தீர்த்து கட்டுவார்கள் என்பதால் சி.பி.ஐ, பாதுகாப்பு கோரியிருந்தான்.
  • என்னுடைய மூத்த அதிகாரிகள் தாவூத்துடனான தொலைபேசி தொடர்புகளை துண்டித்து கொள்ளுமாறு எனக்கு அறிவுறுத்தினர்.
  • தாவூத் தொடர்ந்து என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்தான்..ஆனால் என்னிடம் அதிகாரம் இல்லை என்பதால் நான் அவனுடன் பேசுவதை விலக்கி கொண்டேன்."
  • ஏற்கெனவே மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி "இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி தான் சரணடைய விருப்பம் தெரித்து இருந்தார். ஆனால் அவரின் நிபந்தனைகளான துன்புறுத்த கூடாது; தன்னை வீட்டு காவலில் வைக்க வேண்டும் ஆகியவற்றை அரசு ஏற்று கொள்ள வில்லை" என கூறி இருந்தார் எனபது குறிப்பிட தக்கது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+