டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்... தலையில் காயம்பட்டவருக்கு காலில் ஆப்ரேஷன் செய்த அரசு டாக்டர்
டெல்லியில் தலையில் காயமடைந்தவருக்கு, அரசு மருத்துவர் ஒருவர் தவறுதலாக காலில் அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி சம்பவம்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சைப் பெற வந்த நோயாளிக்கு, மூத்த மருத்துவர் ஒருவர் காலில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்த விஜயேந்திரா என்ற நபர், 'சுருஷ்ட்ரா டிராமா சென்டர்' எனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை ஆப்ரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக உள்ள வந்த மூத்த மருத்துவர் ஒருவர், விஜயேந்திராவை வேறு ஒரு நோயாளியான வீரேந்திரா என தவறுதலாக நினைத்து காலில் துளைப்போட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்ததால், அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.
பின்னர் மயக்கம் தெளிந்து கண் விழித்த விஜயேந்திரா தனது காலில் அறுவை சிகிச்சை நடந்திருப்பவை அறிந்து குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தார். இதுபற்றி அவரது உறவினர்கள் விசாரித்தபோது, தலையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக காலில் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகிகள் விரிவாக விசாரணை நடத்தினர். அதில், அந்த மூத்த மருத்துவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், தனது தவறை வெளியில் தெரியாமல் மறைக்க, விஜயேந்திராவின் மருத்துவ ஆவணங்களை அழிக்க அவர் முயன்றதும் தெரியவந்துள்ளது.
தவறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், விஜயேந்திராவுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். மேலும், தவறுதலாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மூத்த மருத்துவரை தனியாக எந்த அறுவை சிகிச்சையும் செய்யக் கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை.
சுருஷ்ட்ரா டிராமா சென்டரில் இதுபோன்ற தவறுகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல என்கிறார்கள் டெல்லி மக்கள். ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு, இதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு நோயாளிக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்போதைய டெல்லி அரசு சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேரை பணி நீக்கம் செய்ததுடன், ஒருவரை சஸ்பெண்ட் செய்தும், மற்றொருவரை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications