டெல்லி மெட்ரோ ரயில்களில் பிடிபடும் பிக்பாக்கெட்டுகளில் 91% பெண்கள்!
டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு பிக்பாக்கெட் அடித்து சிக்கியவர்களில் 91% பேர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது. டெல்லியில் குற்றச்செயல்கள் தொடர்பான புள்ளிவிவரத்தில் இந்த தகவல் தெ
டெல்லி : டெல்லியில் நடைபெறும் குற்றச்செயல்கள் தொடர்பான புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அதில் மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு பிக்பாக்கெட் அடித்து பிடிபட்டவர்களில் 91 சதவீதம் பேர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.
டெல்லி மெட்ரோ சேவை தலைநகர மக்களின் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. டெல்லி மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு நாளும் 26 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

டெல்லி மெட்ரோ ரயில் சேவைக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளித்து வருகிறது. தாங்கள் பாதுகாப்பு அளிக்கும் பகுதியில் குற்றச் செயலில் சிக்குவோரை சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க் பகுதியில் இந்த ஆண்டு குற்றச் செயல்கள் தொடர்பான புள்ளிவிவரம் டிசம்பர் மாத மத்தியில் வெளியிடப்பட்டது. இதன்படி 100-க்கும் மேற்பட்ட சோதனையில் சிஐஎஸ்எப் ஈடுபட்டுள்ளது.
இதில் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டதாக 479 பேரை பிடிபட்டுள்ளனர். அவர்களில் 438 பேர் பெண்கள் ஆவர். மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் குற்றத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்கள் கையில் குழந்தையுடன் பயணம் செய்தோ அல்லது குழுவாகவோ சென்று ஆண் அல்லது பெண் பயணிகளிடம் இவர்கள் பர்ஸ் அல்லது விலையுயர்ந்த பொருட்களை திருடுவதாக கூறப்படுகிறது.
-
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications