சுனந்தா கொலை வழக்கு... மெஹர் தராரிடமும் விசாரணை நடத்தப்படலாம்: டெல்லி போலீஸ் தகவல்
டெல்லி: சுனந்தா கொலை வழக்குத் தொடர்பாக தேவைப்பட்டால் மெஹர் தராரிடமும் விசாரணை நடத்தப்படும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்தாண்டு டெல்லி ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தனது கணவருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும் தொடர்பு இருப்பதாக டுவிட்டரில் குற்றம் சாட்டிய சில தினங்களிலேயே மர்மமான முறையில் சுனந்தா மரணமடைந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

முதலில் தற்கொலை எனக் கூறப்பட்ட சுனந்தாவின் மரணம் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது.
அக்குழுவினர் சசி தரூரின் உதவியாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. சசி தரூரும் சம்மனை பெற்றுக்கொண்டு புலனாய்வு குழு முன் ஆஜராகி 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் பின் முன்னாள் எம்.பி. அமர் சிங், சுனந்தாவின் மகன் ஷிவ் மேனன் ஆகியோர் விசாரணையில் பங்கேற்று போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். பின்னர் மீண்டும் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டெல்லி காவல் ஆணையர் பி.எஸ். பாஸ்சி. அப்போது அவர், ‘சுனந்தா வழக்கில் தேவையேற்பட்டால் மெஹர் தராரிடம் விசாரணை நடத்தப்படும்' என்றார்.
மேலும், அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதால் அவசியம் ஏற்படும் போது காவல்துறை தனது கேள்விகளை முன்வைக்கும் எனத் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications