மோடி பதவியேற்பு.. 3000 விஐபிக்களை வரவேற்கத் தயாராகும் டெல்லி
டெல்லி: நரேந்திர மோடி பதவியேற்புக்காக 3000 விஐபி தலைவர்கள் டெல்லிக்கு வருகிறார்கள். ராஜபக்சேவும் இன்று டெல்லி வருகிறார். இவர்களை வரவேற்க டெல்லி ஆயத்தமாகி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முன் வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் மோடி பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள்.
சார்க் நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என 3000 பேர் பங்கேற்கவுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மாலத்தீவு அதிபர் உள்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ராஜபக்சேவும் இவர்களில் ஒருவராக கலந்து கொள்கிறார்.

மன்மோகன் சிங்
பிரமதர் பதவியிலிருந்து விடைபெறும் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் அமைச்சர்கள் பலரும் கூட இதில் கலந்து கொள்கின்றனர்.

மோடியின் தாயார்
மோடியின் தாயார் ஹீராபென்னும் கூட பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தவிர ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாஸ், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்காய், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீ்ன் அப்துல் கயூம், ராஜபக்சே ஆகியோர் வெளிநாட்டுத் தலைவர்களாக இதில் கலந்து கொள்கின்றனர். வங்கதேசம் சார்பில் அதன் நாடாளுமன்ற சபாநாயகர் ஷிரின் செளத்ரி வருகிறார்.

இதுவே முதல் முறை
இந்தியப் பிரதமர் ஒருவரின் பதவியேற்புக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோதும்
வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோதும் குடியரசுத் தலைவர் மாளிகை முன் வளாகத்தில்தான் பதவியேற்றார். அவரது சிஷ்யரான மோடியும் அதே போலவே பதவியேற்கிறார். வழக்கமாக தர்பார் ஹாலில்தான் பதவியேற்பு விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புக்கு ஏவுகணைகள்
மோடி பதவியேற்புக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வருகிறார்கள் என்பதாலும், பாஜகவுக்கு தீவிரவாத மிரட்டல்கள் இருப்பதாலும் பலத்த
பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பின்போது விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் நிறுத்தப்படும். அதேபோல இப்போதும் செய்யப்பட்டுள்ளது.

பல அடுக்கு பாதுகாப்பு
டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையிலும், வெளியிலும் கூட பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள அனைத்து அலுவலகங்களும் 5 மணி நேரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை வான் வழியாக எதிரிகள் ஊடுறுவலைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து உயரமான கட்டடங்களிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்படுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications