என் மகன் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவன்: டாக்சி டிரைவரின் தாய்
டெல்லி: தனது மகன் குற்றம் செய்துள்ளார் என்றும், அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் டெல்லியில் பலாத்கார வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவின் தாய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 25 வயது பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதற்காக அவர் கொஞ்சமும் வருத்தப்படவில்லையாம்.

இந்நிலையில் யாதவின் செயலை அறிந்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெய்ன்புரியில் வாழும் அவரது பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து யாதவின் தாய் கங்கா ஸ்ரீ கூறுகையில், என் மகன் தவறு செய்துள்ளார். அவர் அதற்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
தந்தை ராம்நாத் யாதவ் கூறுகையில், முன்பும் என் மகன் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோதிலும் எந்த வழக்கிலும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றார்.
ஷிவ் குமார் யாதவ் மெய்ன்புரியில் பெண்களை கிண்டல் செய்து சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் விசாரணையில் யாதவ் கடந்த 2011ம் ஆண்டு தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி 7 மாதங்கள் சிறையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றங்கள் செய்துள்ள யாதவுக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று டெல்லி போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் நன்னடத்தை சான்றிதழ் அளித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த சான்றிதழ் பொய் என்றும், தாங்கள் யாதவுக்கு எந்த சான்றிதழும் வழங்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உபேர் டாக்சிகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications