டெல்லி-வாரணாசி இடையே புல்லட் ரயில்... 782 கி.மீ- 2 மணி 40 நிமிடத்தில் செல்லலாம்
டெல்லி: நாட்டின் 2-வது அதிவேக புல்லட் ரயில் திட்டம் தலைநகர் டெல்லிக்கும், வாரணாசிக்கும் இடையே செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன், மும்பையில் இருந்து அகமதாபாத் நகருக்கு, அதிவேக புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடர்ந்து மேலும் 7 அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி - வாரணாசி இடையே புல்லட் வழித்தடம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வழித்தடமானது அலிகார், ஆக்ரா, கான்பூர், லக்னோ, சுல்தான்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியை மேம்படுத்தும் வகையில் இந்த புல்லட் ரயில் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தற்போதே தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி - வாரணாசியை இணைக்கும் வழித்தடம் குறித்து, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து வருகிறது. டெல்லி - வாரணாசி இடையேயான 782 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் 782 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரம் 40 நிமிடத்தில் கடக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 43 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை - ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரயில் சேவை 2023-ம் ஆண்டு துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications