வேக்சின் போட்ட 3 பேருக்கு டெல்டா+ கொரோனா.. ம.பியில் குழந்தையும் பாதிப்பு.. அடுத்தடுத்து 2 பேர் பலி
போபால்: மத்திய பிரதேசத்தில் டெல்டா + கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. டெல்டா + கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். வேக்சின் போட்ட 3 பேருக்கு டெல்டா+ கொரோனா.. ம.பியில் குழந்தையும் பாதிப்பு.. அடுத்தடுத்து 2 பேர் பலி
Recommended Video
இந்தியாவில் டெல்டா வகை கொரோனா காரணமாக இரண்டாம் அலை ஏற்பட்டது. மிகவும் வேகமாக பரவ கூடிய, அதிக மரணங்களை ஏற்படுத்த கூடிய டெல்டா வகை கொரோனா காரணமாக இந்தியா பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்தது.
இந்த நிலையில் இரண்டாம் அலை உச்சத்தை கடந்த நிலையில் இரண்டு வாரங்களாக கேஸ்கள் குறைந்து வந்தது. ஆனால் தற்போது மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.

டெல்டா +
இந்தியாவில் தற்போது டெல்டா + கேஸ்கள் பரவ தொடங்கி உள்ளதால் இதனால் கேஸ்கள் அதிகரிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. டெல்டா + வகை கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் டெல்டா + வகை கொரோனாவிற்கு இம்யூன் எஸ்கேப் குணம் உள்ளது. இதனால் உடலில் கொரோனா எதிர்ப்பு திறன் உள்ளவர்களுக்கும் கூட டெல்டா + தாக்கும் வாய்ப்புள்ளது.

மத்திய பிரதேசம்
இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா + கொரோனா பரவி உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே ஒருவர் டெல்டா + கொரோனா காரணமாக பலியானார். இந்த நிலையில் இன்று இன்னொரு நபரும் டெல்டா + வகை கொரோனா காரணமாக பலியானார்.

இரண்டு
மத்திய பிரதேசத்தில் பலியான இரண்டு பேருமே வேக்சின் போடாதவர்கள். ஆனால் அங்கு 7 பேருக்கு டெல்டா + கொரோனா வந்துள்ளது. இதில் பலியான 2 பேர் போக மீதமுள்ள 5 பேரில் 3 பேர் வேக்சின் எடுத்துக்கொண்டவர்கள். இந்த 3 பேரும் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் வேக்சின் எடுத்தவர்கள். ஆனாலும் இவர்களுக்கு டெல்டா + கொரோனா வந்துள்ளது.

கொரோனா
இவர்களுக்கு பெரிய அறிகுறி இல்லாமல் டெல்டா + கொரோனா வந்துள்ளது. இது போக இன்னும் இரண்டு பேருக்கு டெல்டா + வந்துள்ளது. அவர்களுக்கும் பெரிய அளவில் அறிகுறி இல்லை. அதில் ஒருவர் 22 வயது பெண், இன்னொருவர் 2 வயது குழந்தை.

குழந்தை
குழந்தைகள், வேக்சின் போட்டவர்களுக்கு டெல்டா + கொரோனா வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் போபால், உஜ்ஜைன், ரைசன், அசோக் நகர் ஆகிய மாவட்டங்களில் டெல்டா + கொரோனா பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் இதனால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் தீவிரம் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications