ராஜ்யசபாவில் தெலுங்கானாவுக்கு கனிமொழி கடும் எதிர்ப்பு- திமுக வெளிநடப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானா தனி மாநில மசோதாவுக்கு திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபாவில் தெலுங்கானா தனி மாநில மசோதா மீது இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது கனிமொழி, மாநிலங்களை பிரிக்கும் போது அந்த மாநிலங்களின் சட்டசபையின் ஒப்புதல் அவசியம். அந்த மாநில மக்களின் கருத்துக்களை அறிந்த பிறகே மாநிலங்களை பிரிக்க வேண்டும். தற்போதைய தெலுங்கானா மசோதா நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.

மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications