வேலைக்கு செல்லும் ஒவ்வொரு அப்பாக்களுமே இதை சந்தித்திருப்பார்கள்.. நெகிழ வைத்த சுட்டிக்குழந்தை
Recommended Video
புவனேஸ்வர்: வேலைக்கு செல்லும் போது ஒவ்வொரு தந்தையுமே மகன்களிடம் சந்திக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு தொடர்பான வீடியோ வென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒடிசாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா. இவர் ஒடிசா மாநில சிபிசிஐடி ஐஜியாக அங்கு பணியாற்றி வருகிறார்.
இவர் இன்று காலை ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு மேல் போலீஸ் வேலை செய்யும் ஒவ்வொருவரின் இதயத்தை தொட்ட வீடியோ என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதிகப்படியான நேரம் வேலை பார்த்து வரும் போலீஸ் அதிகாரிகள் அதற்காக சந்திக்கும் சூழ்நிலை தான் இது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
This is the toughest part of the police job. Due to long and erratic duty hours most of the police officers have to face this situation.
— Arun Bothra (@arunbothra) April 28, 2019
Do watch. pic.twitter.com/aDOVpVZ879
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் போலீஸ் அதிகாரி ஒருவர் வேலைக்கு செல்வதற்காக முயல்கிறார். அப்போது அவரது மகன் கால்களை பிடித்தபடி, கதறி அழுது போகவிடாமல் மறுக்கிறார்.
தி கிரேட் காளி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது... திரிணாமுல் காங்கிரஸ் புகார் மனு
அப்போது போலீஸ் அதிகாரி மகனை சமாதானம் செய்துவிட்டு, புறப்பட்ட முயல்கிறார். எனினும் கால்களை பிடித்துக்கொண்டு அப்பாவை போகவிடாமல் சிறுவன் அழுகிறார். பார்ப்பவர்களை உருகவைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.