சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து! விபத்து எதிரொலியாக திருப்பி விடப்பட்ட 5 ரயில்கள்: முழு லிஸ்ட்!
புவனேஸ்வர் : ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி தடம்புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், கொல்கத்தாவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஓடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே நேருக்கு நேராக வந்த சரக்கு ரயிலுடன் மோதியது.

சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணித்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்னொரு ரயிலும் அதே வழித்தடத்தில் வந்து மோதியதாக தகவல் வெளிவாகியுள்ளது.
இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு 60 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் வனப்பகுதியில் விபத்து நடந்துள்ளதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று பிரிவு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையின் நான்கு பிரிவும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒடிசா மாநிலத்தில் விபத்திற்குள்ளான கோரமண்டல் ரயிலில் சென்னைக்கு வருவதற்காக 869 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து காரணமாக 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஹவுராவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் இருந்து புரி, சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில் விபத்து எதிரொலியாக மேலும் 5 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 ரயில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications