கொல்கத்தாவில் திடீர் நிலநடுக்கம்.. வீடு - அலுவலகத்தை விட்டு அலறியடித்து ஓடிய மக்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இன்று மதியம் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகராக கொல்கத்தா உள்ளது. எப்போதும் இந்த நகரம் பரபரப்பாக இயங்கும். இந்நிலையில் தான் இன்று மதியம் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள கட்டடங்கள் திடீரென குலுங்கின. மேஜைகளில் இருந்த பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன. இதனால் ஷாக்கான மக்கள் தங்களின் வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். காலி இடத்தில் மொத்தமாக அவர்கள் தஞ்சமடைந்தனர். திடீரென குலுங்கிய பூமியால் கொல்கத்தா மக்கள் பீதியில் உள்ளனர்.
இருப்பினும் நிலநடுக்கத்தின் அளவு என்பது உடனடியாக தெரியவில்லை. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு பற்றி ஆராயப்பட்டு வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிகமான அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிக்டர் அளவில் 5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, வங்கதேசத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியா - வங்கதேச எல்லையாக மேற்கு வங்க மாநிலம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு கொல்கத்தாவிலும் உணரப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications