துப்பாக்கிச்சூடு.. பதற்றம்.. கூச் பிகார் மாவட்டத்துக்கு.. 3 நாட்கள் அரசியல் கட்சிகள் செல்ல தடை!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த கூச் பிகார் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அரசியல் கட்சியினர் யாரும் நுழையக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்குள்ள கூச் பிகார் வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.. இதனையடுத்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.இந்த சம்பவத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எஃப்) காரணம் என்று கூறி மம்தா பானர்ஜி நேரடியாக குற்றம் சாட்டினார்.
மம்தா வன்முறையை தூண்டி விடுகிறார் என்று பிரதமர் மோடி அவருக்கு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் உள்ளூர் மக்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எஃப்) தாக்கியதால், சி.ஐ.எஸ்.எஃப் படையினர் வேறுவழியின்றி அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
கூச் பிகார் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அந்த மாவட்டத்திற்குள் அடுத்த 3 நாட்களுக்கு அரசியல் கட்சியினர் யாரும் நுழையக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், ஏப்ரல் 17-ம்தேதி நடைபெற உள்ள 5-ம் கட்ட தேர்தலுக்கான பிரசார நாட்களையும் குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கூச் பிகார் மாவட்டத்திற்கு செல்வதாக ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications