அமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்
கொல்கத்தா: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல் முறையாக சிம்பன்சி குரங்குகளை கைப்பற்றிய விநோத சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.
சுப்ரதீப் குஹா என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து மேற்கு வங்கத்தில் காடுகளில் இருந்து விலங்குகள், பறவைகளை கடத்தி விற்பனை செய்து வந்தார். அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் சட்டவிரோதமாக விலங்குகளை கொண்டு வந்து விற்பனை செய்தும் இருக்க்கிறார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது அமலாக்கத் துறை. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் சுப்ரதீத் குஹா மீது நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை அவரது சொத்துகளான 3 சிம்பன்சிகள், 4 நீளவால் குரங்களையும் (தென் அமெரிக்கா குரங்குகள்) கைப்பற்றியது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ81 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. சிம்பன்சி குரங்கு ஒன்றுக்கு ரூ25 லட்சம் எனவும் நீளவால் குரங்கு ஒன்றுக்கு ரூ1.5 லட்சம் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த குரங்குகள் அலிப்பூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அலிப்பூர் பூங்காவில் இந்த குரங்குகளைப் பார்வையிடுவதற்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்தும் செல்கின்றனர். அமலாக்கத்துறையினர் இதுவரை தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் என எத்தனையோ பொருட்களை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
அமலாக்கத்துறையின் வரலாற்றிலேயே முதல் முறையாக விலங்குகளை சொத்துகளின் பட்டியலில் சேர்த்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications