உ.பி. முன்னாள் அமைச்சரின் ரூ.200 கோடி சொத்துகள் முடக்கம்... அமலாக்கப்பிரிவு அதிரடி
லக்னோ: சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச மாநில முன்னாள் அமைச்சரின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் ஆட்சி காலத்தில் சுகாதாரத் அமைச்சராக இருந்தவர் பாபு சிங் குஷ்வாஹா. இவர் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் ஊழல் செய்து, சொத்துகள் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பாபு சிங் குஷ்வாஹா மீது மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் அவருடைய ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய ஊரக சுகாதார திட்ட ஊழல் விவகாரத்தில், குஷ்வாஹா மீதும், வேறு சிலர் மீதும் மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம் 14 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
அது மட்டுமின்றி குஷ்வாஹாவின் ரூ.60 கோடி சொத்துகளை மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம் ஏற்கனவே முடக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications