மூணாறு அருகே பாறையில் இருந்து வழுக்கி விழுந்த யானை பலி
Subscribe to Oneindia Tamil
மூணாறு: மூணாறு வனப்பகுதியில் உலவி வந்த யானை ஒன்று பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்தது.
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இன்று காலை யானை ஒன்று அப்பகுதி வனப்பகுதியில் இரை தேடி சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கிருந்த பாறை மீது சென்ற போது அதன் கால் தவறி கீழே விழுந்து விட்டது. இதனால் பள்ளத்தில் விழுந்த யானை பலியானது. தகவலறிந்த வனத்துறையினர் யானையின் உடலை மீட்டனர்.

யானை விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications