ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா' என்ற நிறுவனம், நேரடியாக அன்னிய முதலீடு பெற முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ., தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு இன்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் பிப்ரவரி 2ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications