Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்மரக் கடத்தலை தடுக்க... சேஷாசலம் வனப் பகுதியில் 144 தடை உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: செம்மரங்களை வெட்டுவதற்காக சேஷாசலம் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என ஆந்திர வனத்துறை எச்சரித்துள்ளது.

சர்வதேச அளவில் செம்மரக் கட்டைகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. எனவே, அவற்றை வனப்பகுதியில் இருந்து வெட்டி, கடத்திக் கொண்டு வர பல கும்பல் கூலியாட்களை வைத்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், செம்மரக் கடத்தலைத் தடுக்கும் வகையில் சேஷாசலம் வனப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி அந்த வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது, வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வனப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்களைக் கண்காணிக்கும் வகையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் உள்ளதாகவும், அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் திருப்பதி வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாசலு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த பலரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+