சொத்துக்காக 19 வயது பெண்ணை சித்திரவதைக்குள்ளாக்கிய தந்தையும், சித்தியும்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயால் சொத்துக்காக 19 வயது இளம்பெண் சித்ரவதைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ரமேஷ் -சரளா தம்பதியினரின் ஒரே மகள் பிரதியுஷா. கருத்து வேறுபாடால் இந்தத் தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கணவரைப் பிரிந்த சில வருடங்களிலேயே சரளா தற்கொலை செய்து கொண்டார். இதனால், பிரதியுஷா மீண்டும் ரமேஷிடம் வந்து சேர்ந்தார்.

இதற்கிடையே, சியாமளா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ரமேஷ்.
பிரதியுஷாவின் பெயரில் பத்மரோநகரில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு ஒன்று உள்ளது. இது பிரதியுஷாவின் 18 வயதிற்குப் பிறகு அவரது திருமணத்தின் போது அவருக்கு உரிமையாகும் வகையில் உயில் எழுதப் பட்டிருந்தது.
இந்த வீட்டை தனது பெயருக்கு மாற்ற முயற்சித்துள்ளார் சியாமளா. இதற்காக பிரதியுஷாவின் தாய் வழி உறவினர்களை அவரைச் சந்திக்க விடாமல் தடுத்துள்ளார். அதோடு பிரதியுஷாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். சியாமளாவின் இந்த செயல்களுக்கு அவரது கணவர் ரமேஷும் உடந்தையாக இருந்துள்ளார்.
பிரதியுஷா மனநலம் பாதிக்கப் பட்டவர் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளார் சியாமளா. மேலும், உணவு அளிக்காமலும் பிரதியுஷாவை அவர் சித்ரவதை செய்து வந்துள்ளார். இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தற்கொலை செய்து கொள் என பிரதியுஷாவை அவர் தூண்டியுள்ளார்.
இந்நிலையில், பிரதியுஷாவின் நிலை குறித்து தகவல் அறிந்த தொண்டு நிறுவனத்தார் எல்பி நகர் போலீஸ் உதவியுடன் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்கொலைக்கு தூண்டியது, சித்ரவதை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சியாமளாவைப் போலீசார் கைதுச் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ரமேஷையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications