பிரதமர் சந்திக்காதது ஏன்.. நாங்கள் தீண்டத்தகாதவர்களா.. 2ம் தர குடிமக்களா.. அய்யாகண்ணு காட்டம்
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை ஏன் பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்று விவசாயி அய்யாகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் என்ன 2ம் தர குடிமக்களா என்றும் அவர் கேட்டுள்ளார்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி டெல்லியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தற்காலிகமாக போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.
எனினும் தங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் வரை தமிழகத்திற்கு திரும்ப மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு மேலும் கூறியதாவது:

திரும்ப மாட்டோம்
அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பேச்சை நாங்கள் மதிக்கின்றோம். அவர் எங்களை தமிழகத்திற்கு திரும்பி போகச் சொன்னார். ஆனால் நாங்கள் எத்தனை நாட்களானாலும் வெற்றியோடுதான் தமிழகம் செல்லுவோம். அதுவரை இங்குதான் இருப்போம். எங்களுக்கு வேறு வழியில்லை.

தீண்டத்தகாதவர்களா?
இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற சொல்லப்படுகின்ற விவசாயிகளை, பிரதமர் சந்திக்க மாட்டேன் என்று சொல்லுவதோ நிதி அமைச்சர் சந்திக்க மாட்டேன் என்று சொல்லுவதோ சரியா.. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? நாங்கள் இரண்டாம் தர குடிமக்களா? நாங்கள் கேவலமானவர்களா? தீண்டத்தகாதவர்களா?

கார்ப்பரேட் நாடா?
எங்கள் பெண்களின் தாலி எல்லாம் அடகு கடையில் கிடக்கிறதே.. தாலிக் கொடி ஏலத்திற்கு போகுகிறது. இது விவசாயிகளின் நாடா அல்லது கார்ப்பரேட் கம்பனிகளின் நாடா? என்பதை பிரதமர் மோடி எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். விவசாயிகளை அவர் சந்திக்கவில்லை என்றால் இது விவசாய நாடல்ல.

உறுதி
வறட்சி நிவாரணம் அளிக்கிறேன். கடன் தள்ளுபடி செய்கிறேன் என்று பிரதமர் சொன்னாலே நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். எங்களுக்கு உரிய பதில் அளித்தால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து தமிழகம் திரும்புவோம். அதுவரை டெல்லியில்தான் இருப்போம் என்று அய்யாகண்ணு உறுதிபடத் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications