வலுவான லோக்பால் மசோதா: கெஜ்ரிவாலை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லும் ஹசாரே...
ரலேகான் சித்தி: வலுவில்லாத லோக்பால் மசோதாவை ஹசாரே ஏற்றுக் கொண்டது வருத்தம் அளிக்கிறது என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘தனக்கு இந்த லோக்பால் மசோதா திருப்தி அளிப்பதாகவும், இதற்கு முரணாக சிந்திப்பவர்கள் உண்ணாவிரதம் இருந்து இன்னும் வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டு வாருங்கள் எனத் தெரிவித்துள்ளார் அன்னா ஹசாரே.
காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் அவரது உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால், இம்முறை தனது நோக்கம் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர இருப்பதாக உறுதிமொழியுடன், தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி பகுதியில் உள்ள யாதவ் பாபா கோவிலில் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் ஹசாரே.

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. அந்த மசோதாவை அன்னா ஹசாரேவும் ஏற்றுக் கொண்டார். ஆனால், ஆம் ஆத்மிக் கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், ‘இது லோக்பால் அல்ல, ஜோக்பால். இதனை அன்னா ஏற்றுக் கொண்டது வருத்தமளிக்கிறது' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தற்போது, கெஜ்ரிவாலின் லோக்பால் மசோதா குறித்த கருத்தை நிராகரித்து அன்னா ஹசாரே, அதற்குப் பதிலடி தரும் விதமாக கூறியுள்ளதாவது:-
நான் மசோதாவின் ஷரத்துகளை நன்றாக படித்து இருக்கிறேன். இந்த மசோதா ஏதும் குறையுடன் இருப்பதாக கெஜ்ரிவால் நினைத்தால், அதற்காக அவர் உண்ணாவிரதம் இருக்கட்டும். ராஜ்ய சபாவில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது குறித்து எனக்கு திருப்தியே. இரு சபைகளிலும் முதலில் இதை கொண்டுவரட்டும்.
இந்த மசோதா நிறைவேற்றத்திற்கு பிறகு, யாரேனும் வலுவில்லாமல் இருப்பதாக நினைத்தால் அவர்கள் அதற்காக உண்ணாவிரதம் இருக்கட்டும். கெஜ்ரிவாலின் கருத்துக்கு மேலும் பதிலளிக்க நான் விரும்பவில்லை.
நாங்கள் ஏன் வாய்சண்டையிட வேண்டும். இந்த மசோதாவில் சி.பி.ஐ. மீதான அரசின் அதிகாரம் நீக்கப்பட்டு இருக்கிறது. மற்ற 13 விதிகளை நான் வரவேற்று இருக்கிறேன். அதனால், இந்த மசோதா நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications