வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்... நள்ளிரவு வரை தாக்கல் செய்யலாம்!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5 இன்றே கடைசி நாள் என்பதால் நள்ளிரவு வரை அலுவலகம் செயல்படும்.
டெல்லி: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கூடுதல் அவகாசம், ஆகஸ்ட் 5 இன்றுடன் நிறைவடைகின்றது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள வருமான வரி அலுவலகங்களில் வருமான வரி படிவங்களை நேரில் தாக்கல் செய்வோருக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாக வருமான வரித்துறை அலுவலகங்களில் கூடுதல் சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டன. எனினும் வரி தாக்கல் செய்வோர் கடைசி நேரத்தில் வரி தாக்கல் செய்ய வந்தனர்.
கடைசி நாளான ஜூலை 31ஆம் தேதி ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைனில் வரி கணக்கு தாக்கல் செய்ய முயன்றதால் சர்வர் முடங்கியது.
இதனால் வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாக வருமான வரித் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் வருமான வரித் தாக்கல் செய்வது இன்றுடன் முடிவடைகிறது.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதால், நள்ளிரவு 12 மணி வரை வருமானவரித்துறை அலுவலகம் திறந்திருக்கும் என வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக உள்ளோர், மின்னணு முறையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வரும் நிலையில், நாடு முழுவதும் இன்று நள்ளிரவு வரை வருமான வரி அலுவலகங்கள் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications