கங்கை நதியை சுத்தப்படுத்த மீண்டும் நிதி.. 187 திட்டங்கள் அறிவிப்பு
கங்கை நதியை சுத்தப்படுத்த மீண்டும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதுவரை விவசாயிகளுக்கு, கிராம் புரத்திற்கும் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கங்கை நதி குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
கங்கை
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கங்கை நதியை சுத்தப்படுத்துவோம் என்ற பாஜக வாக்குறுதி கொடுத்து இருந்தது. இதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
ஒதுக்கீடு
இதற்காக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பணம் ஒதுக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்கள் அனைத்திலும் அருண் ஜெட்லீ இதற்காக பணம் ஒதுக்கி இருந்தார். அதேபோல் திட்டத்தில் எவ்வளவு முன்னேற்றம் காணப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.
இப்போது
இந்த நிலையில் இப்போதும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 187 திட்டங்கள் இதற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
எவ்வளவு முறை
இதற்காக நமாமி கங்கா என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 114 மாவட்டங்களில் இதுவரை இந்த திட்டம் செயல்பட்டு இருக்கிறது. இன்னும் எவ்வளவு பணம் கங்கை நதியை தூய்மை படுத்த ஒதுக்கப்படும் என்று கேள்வி எழும்பி இருக்கிறது.